மூலவர்
: எவ்வுள்கிடந்தான்
பெருமாள் : வீரராகவர்
தாயார் : கனகவல்லி
தீர்த்தம்
: ஹிருதாபதணி
- 3 அம்மாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும்.குறிப்பாக வயிற்று வலி கைகால் வியாதி.காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது.
- நேர்த்தி கடன் பப்ளி துப்பட்டி.மேல் வஸ்திரம் அங்கி வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம்.இந்த அங்கி எங்கும் கிடைக்காது. திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை ரூ.300.உருவத்தகடுகளை வௌளி தங்கம் செய்து போடுதல்.தவிர பெருமாளுக்கு அபிசேகம் ஆராதனை செய்தல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம்.தாயாருக்கு 9 கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது.
- உடம்பில் உள்ள மரு கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால் வௌளம் ஆகியவற்றை பக்தரகள் கரைக்கிறார்கள்.கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்பிக்கின்றனர்.
- தலபெருமைகள் தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம் இத்தலத்து குளம் தீர்த்தம் கங்கையை விட புனிதமானது ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம் மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது.
- மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிசேகம் சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார்.லட்சுமி நரசிம்மர் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் இத்தலத்தில் மிகவும் விசேசம் மிகவும் பழமையான தலம் இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
பொது தகவல்கள்:
- பாடல் பாடியோர் இத்தலத்தை திருமழிசைபிரான் திருமங்கைஆழ்வார் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
தல வரலாறு :
- சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் 1 வருடம் தவம் இருந்தார்.வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார்.முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் 1 வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார்.மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார்.
No comments:
Post a Comment