Search This Blog

Tuesday, 1 November 2016

Attention to All Devodees....

Dear Viewers,

Warm Greetings to All.

Interesting information and your valuable feedback  if you want to share with all then please send it to cityarun@gmail.com to publish in cityxerox.in which will reach to all our viewers.

With Regards...
Arun
India

திருநீறு

 
    நீறில்லா நெற்றி பாழ்
என்கிறாள் அவ்வைப்பாட்டி

 "மந்திரமாவது நீறு' என்று திருநீற்றின் 
மந்திரத்தன்மையைப் போற்றுகிறார் ஞானசம்பந்தர்

  •  திருநீறுக்கு விபூதி என்ற பெயர் உண்டு. இதற்கு "மேலான செல்வம்' என்பது பொருள். குளித்தவுடன் தலையில் இருக்கும் நீரைப் போக்கி தலைவலி, ஜலதோஷத்தை தடுக்கும் தன்மை விபூதிக்கு உண்டு. 

  • கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி நின்று திருநீறு பூசுவது உசிதம். காலை, மாலை, சாப்பாட்டிற்கு முன், கோயிலுக்குச் செல்லும்நேரங்களில் விபூதி பூசுவது அவசியம். 
  • கையில் எடுக்கும் போது, சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெற்றியை சற்று உயர்த்தி, "சிவசிவ' "முருகா' என்று மந்திரம் ஜெபித்தபடியே பூசவேண்டும். "நீறு நிறைஞ்சிருந்தா நெற்றிக்கழகு' என்பதை இளையதலைமுறையினர் உணர்வது அவசியம்.
  
திருநீறு பூசும்போது கடைபிடிக்கவேண்டியது
1. வெள்ளை நிற விபூதி மட்டும் அணிய வேண்டும் 
  2.முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறைய பூசவேண்டும் 
  3.வடக்கு கிழக்குமுகமாக நின்று பூசவேண்டும் 
  4.நடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது 
  5.நித்திரைக்கு முன்னும் பின்னும் குளித்த உடனும் சூரிய உதய அஸ்தமனத்தின் போதும் உணவுக்கு முன்னும் பின்னும் பூசைக்கு முன்னும் பின்னும் மல சல காரியங்களுக்கு பின்னும் பூச வேண்டும் 
  6.ஆசாரியர் சிவனடியார் இவர்களிடம் விபூதி பெரும் போது அவர்களை வணங்கி பெறுதல் வேண்டும் 
  7.நந்தி முத்திரை (ம்ருகீ முத்திரை )யால் மட்டுமே எடுக்க வேண்டும்
  
8.அணியும் போது ஐந்தெழுத்து மந்திரம் கூறி அணியவேண்டும்


திருநீற்றுக்காகவே இரண்டு நாயன்மார்கள் தங்கள் உயிரை துறந்தவர்கள்
 
              ஒருவர் ஏனாதி நாயனார், மற்றொருவர் மெய்ப்பொருள் நாயனார்
 

  • எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லாத அரசியல் கட்சி சின்னங்களையும் கட்சித்  தலைவனின் படத்தையும் கூசாமல் அணியும் மனிதவர்க்கமே இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் திருநீற்றை அணிந்து பேறு பெறுவோம். சிவசின்னங்களை  அணிய நாம் கூச்சப்பட்டால் சிவபெருமான் நம்மைப்பார்க்க கூசுவார்.திருநீறணிந்தால் எல்லா வளமும் நலமும் ஒருங்கே கிடைக்கும் .சிவசின்னம் அணிந்து சிவவேடம் என்பது சிவபெருமானால் மட்டுமே அருளமுடியும் .அந்த கொடுப்பினை எல்லோர்க்கும் கிடைக்க எல்லாம் வல்ல ஈசன் அருள்புரிவாராக
                       
எனவே தினமும் திருநீறு பூசி திருநீற்றுப்பதிகம் பாடினால் நம் வினைப்பயன் அழியும் என்பது கண்கூடாக பலபேர் அனுபவித்த உண்மை 

போற்றி  ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் 

ஹயக்ரீவர்


 
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க அருள்பவர் ஹயக்ரீவ மூர்த்தி. இவரை வழிபட்டால் கிரகிப்புத்திறனும், ஞாபகசக்தியும் அதிகரிக்கும். சரஸ்வதிதேவிக்கு வித்தைகளை உபதேசித்தவர் இவர்
  • வேதங்களை திருடிச் சென்ற மதுகைடபர்களை அழித்து, பிரம்மாவிடம் அவற்றை ஒப்படைத்தவர். திருமால் தான் எடுத்த தசாவதாரங்களுக்கு முன்பே ஹயக்ரீவ அவதாரம் எடுத்ததாகச் சொல்வர்.
  • குதிரைமுகம் கொண்ட இவர் யோகநிலையில் தனித்தும், லட்சுமிதேவியோடு சேர்ந்தும் அருள்புரிகிறார். திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும்
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]