Search This Blog

Monday, 17 October 2016

சீதை பூமிக்குள் மறைந்த இடம் :::: “சீதா சமாஹித் ஸ்தல்’


  • இராமாயண பெருங்காப்பியம் சொல்லும் அறவழிகள் ஏராளம். அதேசமயம், அவற்றை மக்களுக்கு உணர்த்த வந்த இறையவதாரங்களான ராமன், சீதை, லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர் அடைந்த துன்பங்களோ அதைவிட ஏராளம். அதிலும் சீதாபிராட்டி பட்ட துயரம் சொல்லித் தீராது.
  • சீதாப்பிராட்டியின் முதற்கட்ட வாழ்க்கை இனிமையாகத்தான் இருந்தது. ராமபிரான் கரம் பற்றியபின் அது பன்மடங்கு இனியதாக மாறியதும் உண்மை. ஆனால் இராவணனால் அபகரிக்கப்பட்டபின் அத்தனையும் தலை கீழாய் மாறிப்போனது.அசோக வனத்தில் அவள் அனுபவித்த கொடுமை கொஞ்சமல்ல. “உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்- அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன்’ என சீதையின் நிலையைச் சொல்லுகிறார் கம்பர்.
  • தன் சொல்லாலேயே உலகங்களையெல்லாம் எரிக்கவல்ல ஜானகிதேவி, அத்தனை துயரத்திலும் அந்த ஆற்றலைப் பயன்படுத்த வில்லை. ராமனால் மீட்கப்பட்டு அவன் வில்லுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதற்காகவே பெருந்துன்பங்களையும் தாங்கிக் கொண்டு உயிரையும் விடாமல் காத்திருந்தாள். அவள் நினைத்தது நடந்தது. இராமன் அம்புகள் அரக்கர்களை அழித்தன. சீதையும் விடுவிக்கப்பட்டாள். நெடும்பிரிவுக்குப்பின் மணாளனைக் கண்ட மகிழ்ச்சியை அவளால் வெகுநேரம் அனுபவிக்க முடியவில்லை.
  • அக்னி பரீட்சை என்னும் சோதனை அப்போதே ஆட்கொண்டது. அதிலிருந்து மீண்ட சீதையால் சிலகாலம் மட்டுமே நிம்மதியுடன் இருக்க முடிந்தது. யாரோ ஒரு குடிமகன் சொன்ன பழிச்சொல், சீதையின் வாழ்வில் பெரும் துயரமலையைக் கொண்டுவந்து போட்டது.
  • எந்தக் கணவனின் நினைவிலேயே அனுதினமும் வாழ்ந்தாளோ- அந்த ராமனாலேயே காட்டுக்கு அனுப்பப்பட்டாள் சீதாபிராட்டி- அதுவும் கருவுற்ற நிலையில்!
  • கானகத்திலிருந்த வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அவளது பிற்கால வாழ்க்கை கழிந்தது. ஜனக மன்னனின் மகளாகப் பிறந்தவள்- தசரத சக்கரவர்த்தியின் மருமகளாக ஆனவள்- எதிர்ப்பாரற்ற ராஜாராமனின் பத்தினியாக வந்தவள்- தற்போது கானகத்தில் ஒரு ஏழைப்பெண்ணின் எளிய வாழ்க்கையை மேற்கொண்டாள். அங்கே அவளுக்கு ஆறுதல் தந்தவர்கள்- கானகத்தில் பிறந்த சீதாராம புத்திரர் களான லவனும் குசனும்தான்.
  • அயோத்தியில் ஸ்ரீராமன் அஸ்வமேத யாகம் நடத்தினார். அதற்கான யாக குதிரை பல நாடுகளுக்கும் சென்றுவரும். அந்த குதிரையை யாராவது கைப்பற்றினால், அவரை வென்று குதிரையைக் கொண்டுவந்து யாகத்தை நிறைவு செய்யவேண்டும். அவ்வாறு வந்த யாக குதிரையை லவனும் குசனும் கைப்பற்றுகிறார்கள்.அவர்களை வென்று குதிரையை மீட்க லட்சுமணனாலும் இயலாமல் போகிறது. இறுதியில் ராமனே போருக்கு வருகிறார். இவர் தங்கள் தந்தையென்று பிள்ளைகளுக்குத் தெரியவில்லை; இவர்கள் தம் மக்கள் என்று ராமனுக்குத் தெரியவில்லை. போர் தொடங்குகிறது. ராமனின் அனைத்து பானங்களையும் எதிர்கொள்கிறார்கள் பிள்ளைகள்.
  • அதற்குள் இந்த விவரம் சீதாபிராட்டிக்குத் தெரியவர, பதறிப்போய் ஓடிவருகிறாள் சீதை. அப்போது ராமபிரான் தன் ராமாஸ்திரத்தையே எடுத்துவிட்டார். சீதாபிராட்டியின் ஓலம் அவரை ஸ்தம்பிக்கச் செய்கிறது. நெடுநாள் பிரிந்திருந்த கணவனை போர்க்கோலத்தில்- அதுவும் தன் பிள்ளைகளுக்கெதிராகக் காணுகிறாள் சீதை. அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!
  • அங்கே போர் நின்று விடுகிறது. உண்மையை உணர்ந்த பிள்ளைகள் தந்தையின் பாதம் பணிகிறார்கள். தந்தையும் தன் வாரிசுகளை மார்புறத் தழுவிப் பேரானந்தம் அடைகிறார். அங்கே தனியாக நிற்கிறாள் சீதை.
  • ராமபிரானுடன் அயோத்தி செல்ல அவள் விரும்பவில்லை. தான் பரிசுத்தமானவள் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை இன்னும் மிச்சமிருப்பதாக உணர்கிறாள். அதுவும் தனக்காக இல்லை- தன் கணவனுக்காக!
  • அப்போது- தான் எந்த பூமித்தாயின் மடியிலிருந்து பிறந்தாளோ அந்த பூமித்தாயை அழைக்கிறாள். “தாயே! பூமி மாதா! என் கணவரின் திருவடிகளையே நான் எப்போதும் எண்ணியிருந்தது உண்மையானால்- என் மணாளனின் திருநாமத்தை எப்போதும் உள்ளத்தில் உச்சரித்த வண்ணமிருந்தது உண்மையானால், என்னை உனக்குள் ஏற்றுக்கொள்” என்கிறாள்.
  • அடுத்த கணம் அது நடக்கிறது. வானமும் பூமியும் நடுங்கும் வண்ணம் பேரோசை உண்டாகிறது. சிவ- பார்வதி தரிசனம் காண்கிறாள் சீதை. அடுத்து பூமி பிளவுபடுகிறது. அதிலிருந்து வெளிப்பட்ட பொன்னாசனத்தில் அமர்ந்திருக்கும் பூமாதேவி சீதாபிராட்டியை தன்னோடு அமரவைத்து தழுவிக்கொள்கிறாள். ஆசனம் பூமிக்குள் சென்று மறைய, பூமி முன்புபோல மூடிக்கொள்கிறது. பாரத பூமியைப் புனிதப்படுத்த வந்த சீதை எனும் மாபெரும் தியாகத்தின் சகாப்தம் அங்கே நிறைவு பெறுகிறது.
  • உத்தர ராமாயணம் கூறும் இந்த சம்பவம் நடந்த இடம் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இதை “சீதா சமாஹித் ஸ்தல்’ என்று அழைக்கிறார்கள். அதாவது சீதாபிராட்டி பூரணமடைந்த தலம். இங்கே சீதைக்கென்று ஒரு ஆலயம் அமைந்துள்ளது. மூன்று பக்கமும் குளம். ஒரு பக்கம் கோவில். ஆலயத்திலுள்ள சீதையின் சிற்பம், எல்லா நிகழ்வுகளையும் நமக்கு உணர்த்திவிடும் உயிரோவியமாயத் திகழ்கிறது.
  • இந்த ஆலயம் சுமார் இருபது ஆண்டு களுக்குமுன் கட்டப்பட்டதுதான். அதற்குமுன் வெட்டவெளியாக இருந்த இடத்தையே பக்தர்கள் தரிசித்து வந்தார்கள். ஆலயத்தின் அருகே கயிலையில் சிவன் வீற்றிருப்பதுபோன்ற தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சனேயரின் திருவுருவமும் உள்ளது. இங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் வால்மீகி ஆசிரமம் உள்ளது.
  • அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டையும், ஆஞ்சனேயர், வால்மீகி, லவன், குசன் உருவங்களும் உள்ளன.இந்த தலத்திற்குச் செல்லும்போது மாபெரும் தியாகத்தின்- அன்பின்- கருணையின் மடியில் இருப்பதாகவே உணர்கிறோம்.seedha3
  • கணவன்- மனைவி பிணக்கு தீர்ந்து ஒற்றுமை உண்டாகவும்; மனக்குழப்பம் நீங்கவும்; மனஅமைதி கிட்டவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
  • அலகாபாத்திலிருந்து காசி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 60 கிலோமீட்டர் சென்று, அங்கிருந்து செல்லும் பிரிவுச்சாலை யில் 14 கிலோமீட்டர் சென்றால் இந்த தலத்தை அடையலாம். உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை பயண ஏற்பாடுகளைச் செய்து தருகிறது.

ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்?


  • தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. 
  • ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.
  • தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.
  • கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள். மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.
  • மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்.
  • உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.

புகை பிடிப்பவர்களின் கவனத்திற்கு!
  • சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.
  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது. முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிரார்கள்.
  • என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் – ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு கட்டாயம்.
  • இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
  • முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
  • யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும் மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.
  • உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள். போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
  • வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்; 10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது.
  •  உலகப் புகழ்பெற்ற லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
  • யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம். இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை தற்செயல் என்று சொல்லலாமா?
  • நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.
  • யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.
  • 2005 இல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். 
  • இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான். சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.
  • இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்? லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.
  • சற்று சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆய்வறிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க முடியுமா?

written by Dr. Stephen Carr Leon

தட்சன்

  • தனது கடும் தவத்தால், வரங்கள் பெற்று ஆணவத்தோடு வாழ்ந்தான் தட்சன். இதைப் பார்த்த வியாழ பகவான், அவனுடைய செருக்கு அடங்க வேண்டும் என நினைத்து, வேதவல்லி (மறைக்கொடி) என்னும் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்.
  • அவர்களுடைய வாழ்க்கை நன்றாக அமைந்தது. 1000 குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தன. ஆனாலும் தட்சனின் திமிர் அடங்கவில்லை. அவன், படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவுக்கு சவாலாக அமைந்தான்.
  • தன்னுடைய பிள்ளைகளை அழைத்து, “படைக்கும் தொழிலை இனி நீங்கள் தான் பார்க்கவேண்டும், சிறிது காலம் பிரம்மாவுக்கு ஓய்வு வேண்டும். நீங்கள் உங்களுடைய கடும் தவத்தால் பிரம்மாவிடம் இருந்து இவ்வரத்தை பெறலாம்” என்றான்.
  • அவர்களும் தந்தை சொன்னதுபோல், தவத்தை ஆரம்பித்தனர். இதைப்பார்த்த நாரதருக்கு பயம் வந்துவிட்டது. அவர்களின் தவத்தை திசைதிருப்ப எண்ணினார். “நீங்கள் கடவுளை சேரும் நிலைக்கான தவத்தை செய்யுங்கள். படைத்தல் என்பது பிரம்மரின் தொழில். உங்கள் தந்தை சொன்னதைக் கேட்டு பாவங்களை சேர்க்காதீர்கள்” என்று அறிவுறுத்தினார். அதன்படியே தவம் செய்து, அவர்கள் கடவுளை சேர்ந்தனர்.
  • இதைக் கேள்விப்பட்ட தட்சன், “உனக்கு, எந்த உலகிலும் நிலையான இடம் இல்லாமல், அங்கும் இங்குமாய் திரிவாய்” என்று நாரதருக்குச் சாபமிட்டான். அதனால்தான் நாரதர் ஒரு இடத்தில் தங்காமல் திரிந்துகொண்டு இருக்கிறார்.
  • தட்சனுக்கு மீண்டும் 23 பெண்கள் பிறக்கிறார்கள். அதில் 13 பெண்களை தர்மத்துக்கு திருமணம் செய்து வைக்கிறான். மற்ற 10 பெண்களை, 10முனிவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறான். அதன்பிறகு, 27 நட்சத்திர தேவதைகள் பிறக்கிறார்கள். இந்த 27 நட்சத்திர தேவதைகளை சந்திரனுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.
  • இந்தத் திருமணத்தில்தான் தட்சனின் ஆணவம் இன்னும் அதிகமாகிறது. சந்திரனுக்கு ரோஹினி, கார்த்திகை தேவதைகள் மீதுதான் அதிகம் காதல். அவர்களுடன் மட்டுமே இருப்பார். இது தெரிந்து மற்ற 25 பெண்களும் தட்சனிடத்தில் முறையிட்டார்கள். இது தெரிந்த தட்சன் மிகவும் கோபப்பட்டு, சந்திரனுக்கு “உன் அழகு அழியட்டும், நீ மறைந்து போவாய்” என சாபமிட்டான். சந்திரன், பிரம்மாவிடம் சென்று, தட்சன் சாபத்தைப் பற்றி கூறினார். பிரம்மா அவரை, சிவனிடம் சென்று வேண்டுமாறு அனுப்பி வைத்தார்.
  • சந்திரன் கயிலைக்குச் சென்று, சிவனைப் பார்த்து, தட்சன் சாபத்தைப் பற்றிவிளக்கினார். சிவன் அதை கேட்டு, “உன் அழகு மீண்டும் கிடைக்கும். ஆனால்,ஒருநாள் நீ உலகுக்கு தோன்றாமல், ஓய்வில் இருப்பாய். தேய்ந்து மீண்டும் 15நாட்கள் கழித்து, முழு நிலவாய் வளர்வாய்,” எனக் கூறி சந்திரனை அனுப்பி வைத்தார்.  இதனால் தட்சன், சிவனிடம் சண்டையிடுகிறான். அச்சூழலில், சிவன் உமா தேவிக்கு வேதசாரத்தைப் பற்றி கூறுகிறார். “சக்தி என்பவள் வடிவம்; சிவம் என்பது ஜீவன்” என்கிறார் சிவன். உமா தேவி, “வடிவம் இல்லை என்றால், ஜீவன் எப்படி வரும்?” என்று சிவனை கேட்கும் போது, சிவன் “இதைப்பற்றி நீ தெரிந்து கொள்ள,பூமிக்கு போக வேண்டும்” என்றார். அம்பிகையும் சம்மதம் தெரிவித்து, பூமிக்குஅவதாரம் எடுக்கிறாள்.
  • காளிந்தி நதிக்கரையில் (இன்றைய யமுனை நதி), அழகான சங்கு நிறத்தில் ஒரு சிறு குழந்தையாக அவள் பிறந்தாள். தட்சனுக்கு அந்தக் குழந்தையை பார்த்ததும் அவ்வளவு ஆசை வந்துவிட்டது. தட்சன்-வேதவல்லி, அந்தக் குழந்தையை வளர்த்தனர். தட்சனின் குழந்தை என்பதால், அந்த குழந்தைக்கு ‘தாட்சாயணி’ என பெயரிட்டனர். வேதவல்லிக்கு எல்லாக் குழந்தைகளைவிட, தாட்சாயணி மீது அதிக பாசம். அவளை மிகுந்த பாசத்துடன் வளர்த்தாள்.சிவன் ஏழை பிரம்மாச்சாரி வேடமிட்டு, தாட்சாயணியை மணக்க பூமிக்கு வந்தார்.அவருக்கு தன் மகளை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளை செய்தான் தட்சன். ஆனால், சிவன் முகூர்த்த நேரத்தில் மறைந்துவிட்டார். இதனால் தட்சன் பெரிதும் சினம் கொண்டு, சிவனை கடுஞ்சொற்களால் பேசினான்.
  • மேலும், படைகளை போருக்காக ஏற்பாடு செய்தான். அத்தருணத்தில் சிவன், தாட்சாயணியை தூக்கிக்கொண்டு கயிலை சென்றுவிட்டார். படைகளை கூட்டிக்கொண்டு, கயிலைக்குப் புறப்பட்டான் தட்சன். அங்கு நந்தி அவனைப் போகவிடாமல் தடுத்தார். இது தட்சனின் சினத்தை தணிக்காமல், இன்னும் கடுமையாக்கியது. அவன் அங்கிருந்து புறப்பட்டு, ‘சிவன் இனி என் தெய்வம் இல்லை. அவரை யாரும் எக்காரணத்துக்கும் வணங்குதல் கூடாது’ என்றெல்லாம் உத்தரவு போட்டான். மேலும், சிவகணங்களையும் எதிரியாகவே கருதினான்.
  • ‘தட்சனின் ஆணவம், அவனுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்; மீண்டும் மீண்டும் பிறக்கின்ற சூழ்நிலையையும் ஏற்படுத்திவிடும்’ என்று வருந்தினாள் உமாதேவி. எனவே, தட்சனின் ஆணவத்தை அடக்கி, மோட்சத்தை கொடுக்கும்படி, சிவனிடம் கேட்கிறாள். சிவன் பார்வதியை, பூலோகத்தில் தட்சன் நடத்தும் யாகத்தில் பங்கெடுத்து வரும்படி அனுப்பி வைக்கிறார்.
  • தட்சன் யாகத்தில் அனைவரும் இருக்கலாயினர், சிவனை தவிர. பார்வதி இதைப் பார்த்து சினம் கொண்டு, தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கிறார். தட்சன் பார்வதியை அவமானப்படுத்துகிறான். அதனால், பார்வதி அவமானம் தாங்காமல், தன் சரீரத்தை யோகத்தால் துறக்கிறாள். அதை அறிந்த சிவன் பெருங்கோபம் அடைகிறார். வீரபத்ரரை தட்சனுடன் போர் புரிய அனுப்பி வைக்கிறார் சிவன். வீரபத்ரர் தட்சனின் தலையை வெட்டி கயிலைக்குத் திரும்புகிறார். தட்சனின் உடம்பு சிவனை தேடிச் சென்று, பாதங்களில் விழுந்து மன்னிப்பும், மோட்சமும் கேட்கிறது.
  • சிவபூதங்கள் தட்சன் தலையை விழுங்கியதால், சிவன் ஆட்டின் தலையை வெட்டி தட்சனுக்கு வைக்கிறார். தட்சனுக்கு மோட்சம் கிடைக்கிறது. தவம் சிறந்தது; வரம் சிறந்தது; ஞானம் சிறந்தது; பக்தி சிறந்தது; வேள்வி சிறந்தது... என்று சிறந்த அனைத்தும் ஒன்று சேர்ந்திருந்தது தட்சனிடம்.
  • ஆனால், அறவே இருக்கக்கூடாத ஆணவம் - திமிர் அதுவும் அதிகமாகவேசேர்ந்திருந்தது. அது அழிவைத் தரும் என்பதைத்தான் தட்ச வேள்வி நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

ஐயப்பன் முழங்கால்களை கட்டியிருப்பது



  •  சுவாச பந்தத்தையே குறிக்கிறது.யோக பாடத்தில் கால் என்றால் மூச்சு என்று பொருள். ஐயப்பன், கால்களை தன் முதுகு தண்டெலும்பின் கீழ்பகுதியுடன் சேர்த்து கட்டி, ஆசனப்பகுதியும், இரண்டு பாதமும் தரையில் படும்படி குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார்(மூலபந்தம்). மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.
  • யோகாசன நிலையில் , வயிற்றை உள்ளிழுத்து (உட்டியானபந்தம்), மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்தக் கிரியா சக்தியை ஞான சக்தியாக மடைமாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் (நயன தீட்ஷை) நிலையில் இருப்பதால் தான், கலியுகத்தில் இவ்வளவு அதிகமானப் பக்தர்களைத் தன்பக்கம் ஈர்க்கமுடிகிறது
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]