தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம்
ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி.
கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம்,
அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான்
தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை
வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்.
மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர்
கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு
ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு
ஆரோக்கியமும் உண்டாகும்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு
சன்னதி உள்ளது
No comments:
Post a Comment