🙏அதுவும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை வேங்கடவனை விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார். அதிலும் ஏழரை சனி பீடிக்கப்பட்டவர்கள் மேற்படி விரதம் இருந்தால் சனியின் தொல்லை நிச்சயம் நீங்கும்.
ஏனெனில் சனி பகவான் கலியுகத்தில் முதல் முதலாக வரும் வழியில் நாரதர் சனிபகவானிடம் தாம் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம் .
ஆனால் திருமலை பக்கம் சென்று விடாதீர்கள் என்று அவரை தூண்டி விட எதை செய்ய வேண்டாம் என்று நாம் சொல்கிறோமோ அதையே செய்யும் துடுக்கான குழந்தைகள் போல்! என்னை யார் என்னசெய்ய முடியும் என்று திருமலையில் மேல் தன் காலை வைக்க! பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார் சனி.
🙏திருமலையில் யாரிருக்கிறார் என தெரிந்தும் மற்றவரை துன்பபடுத்தி இன்பம் காணும் சனி தானே துன்பப்பட்டு நடு நடுங்கி தன்னையும் படைத்து வழிநடத்தும் சட்சாத் மகாவிஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதை கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்க!
பெருமாளும் என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார் கருணைக்கடல் நம் கோவிந்தராஜன்.
🙏சனியும் பணிவுடன் உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பபடுத்த மாட்டேன் ஸ்வாமி.
மகாபிரபு எனக்கு ஒரு வரம் தரவேண்டும் என்றார். நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை ஆனதால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும் சுவாமி என்றார்.
திருவேங்கடவனும் சனிதேவனுக்கு வரத்தை அளித்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்று கொண்டார்.
🙏இப்படித்தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது.
சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனி அன்றுதான்.
சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த உகந்த நாள் ஆயிற்று.
🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment