Search This Blog

Wednesday, 19 September 2018

சகட தோஷம் விலக


  • சந்திரனுக்கு 6-8-12-ல் குருவீற்றிருக்கப் பெற்ற ஜாதகர்களுக்கு சகடயோகம் உண்டாகிறது. இவர்கள் நிலையான வாழ்வு வாழ்வதில்லை. மேடு பள்ளமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

  • இத்தகைய ஜாதக அமைப்புப் பெற்றவர்கள் ராஜராஜேஸ்வரி யந்திரம் வாங்கி பூஜை செய்யலாம்.அல்லது யானைமுடி மோதிரம் அணியலாம். இதனால் இத்தோஷம் நீங்கி வளம் பெறலாம்.

சகட தோஷம் விலக எளிய பரிகாரம்

  • சிலரது  வாழ்க்கையில்  காரியத்தைச் செய்ய முற்பட்டவுடன்  கைகூடாது. முயற்சி திருவினையாக்கும் என்ற  தத்துவத்தை மனதில் கொண்டு, ஒன்றுக்கு மூன்று முறை முயற்சி செய்து அந்த முயற்சியால் மட்டுமே வெற்றி இலக்கை அடைவார்கள். மனதில் உறுதி எல்லாருக்கும் அமைவதில்லை.  ஒரு சிலருக்கு மட்டுமே வரும்.  
  • எல்லா காரியமும் முதலில் முடங்கி பிறகு முயற்சிக்குத் தக்கபடி தான் வெற்றி கிடைக்கிறது..என்றால்  அவர்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-ல் சந்திரன் இருந்தாலும்,  அல்லது குரு பகவான் நின்ற ராசிக்கு  6,8,12-ஆம்  இடங்களில் சந்திர  பகவான் அமர்ந்திருந்தாலும் அந்த ஜாதகர் சகட  தோஷத்தை அடைகிறார். லக்னத்துக்கு 6-ல் சந்திரன்  நின்று வெகு ஜனங்களை இரட்சிப்பவராக  இருந்தாலும் அவரது வாழ்க்கையில் முழுமையான தோல்விகளையே  தருவார்.  அதனை அடுத்து பிறந்தது முதல் பெரியவர்கள் ஆனபின்பும், கஷ்டத்தையும், தோல்வியையுமே சந்தித்து வருபவர்கள்  உங்களது  ஜாதகத்தில் மேற்கண்டவாறு சந்திர பகவான் அம்ர்ந்துள்ளாரா என்பதை நீங்களே  தெளிவுபடுத்திக் கொள்ளலாம். நிச்சயமாக உங்கள் ஜாதகம் மேற்கண்டவாறு தான் அமையக்கூடும். உங்களுக்கு  உங்கள் ஜாதகத்தை ஆய்வு செய்யத் தெரியவில்லை என்றால், அருகில் உள்ள நல்ல ஜோதிடரிடம் காட்டி தெரிந்து கொள்ளுங்கள். சகட தோஷத்துடன் கூடிய ஜாதகம் அமையப் பெற்றவர்கள் கீழ்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து இனிவரும் காலத்தை வளமாக்கலாம்.

  •  எளிய பரிகாரம்-1
  • சகட தோஷம் உள்ளவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை வெற்றியாக மாற்றித் தரும்  சர்வ வல்லமை படைத்தவர் எம்பெருமான் சிவபெருமான் ஒருவரே ஒருவரே, சிவலிங்க பூஜையால் கண்ணப்பர் முக்தி அடைந்தார்).சிவலிங்க பூஜை செய்த மார்க்கண்டேயன் நீண்ட ஆயுளை பெற்று தலைசிறந்த மாமுனிவராக வாழ்ந்தார்.
  • சிவலிங்க பூஜையால் வெள்ளை யானையும், சிலந்தியும், முக்தி நிலை பெற்றன. வெள்ளை   யானைக்கு சிவபதமும், சிலந்திக்கு அரசாளும் பாக்கியமும் கிடைத்தது. மேலும் சிவகணத் தலைவர்களாய் எம்பெருமான் சிவபெருமானுக்கு திருத்தொண்டுகள் புரிந்து வருகின்றனர். எனவே யார் ஒருவர் காலை எழுந்தவுடன் தினசரி ‘ஓம் நமசிவாய நமக’ என்று 108 முறை சொல்கிறார்களோ அல்லது குறைந்தது ஒன்பது முறையாவது சொல்கிறார்களோ அவர்களுக்கு பிறப்பில் ஜாதகத்தின் வாயிலாக ஏற்பட்ட சகட தோஷம் விலகும்.  சகட தோஷம் விலகி  சகட யோகமாக மாறும்.
  • எளிய பரிகாரம்-2
  • காலை எழுந்தவுடன் ‘ஓம் நமசிவாய நமக’ என்று 108 முறை வாழ்நாள் முழுவதும் சொல்ல முடியாதவர்கள் பச்சரிசி  தவிடு மூன்றுபடி  எடுத்து அதனை உங்கள் அருகில் உள்ள பசு மாட்டிற்கு ஒன்பது நாட்களுக்கு கொடுத்து அந்தப் பசுவை வணங்கி வருவார்களேயானால் அவர்களுக்கு சகட தோஷம் விலகி வாழ்வில் தோல்விகள் ஏற்ப்டாது.(அனுபவத்தில் கண்ட உண்மை.).

Friday, 14 September 2018

சண்டிகேஸ்வரர் சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்!!! உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா?

  • சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.
  • பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன.
  • ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர்.
  • அவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.
  • அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.
  • அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன். எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார்.
  • இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை.
  • சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம். சிவ ஆலங்களில் சண்டீகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல்
  • மேலும் சண்டீகேஸ்வரர் சிவபக்தர் மட்டும் இல்லை சிவனின் சொத்துகளை பாதுகப்பவர் எனவே சிவஆலயங்களை விட்டு செல்லும் முன் சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம் வராமல் கைகளை துடைத்து ,சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டீகேஸ்வரர் தியானம்கலையாமல் செய்யவேண்டும் இதுவே மறையாகும்.
  • சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை…
    “ *ஓம் நமசிவாய* “

செல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை!!!

  • இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
 
  • பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். 
 
  • நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.

  • ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
  • தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி – அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.

  • மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும். ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
 
  • பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும். 
 
  • பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
  • மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
  • குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.

  • கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
  • பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
  • வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
 
  • முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே. 
 
  • சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.

விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை

  • முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.
  • எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை  கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.
  • விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.
  • அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.
  • பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்

Saturday, 8 September 2018

என்னென்ன உணவு சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும்

தார்த்த குண சிந்தாமணி எனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வைத்திய நூல் என்னென்ன உணவு சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும் மற்றும் குணநலன் எப்படி மாறும் என விளக்கி உள்ளது.

உப்பு அதிகம் சேர்த்தால் ஆணவம் அதிகரிக்கும்...புளி அதிகமானால் பொறாமை குணம் அதிகரிக்கும்.தயிர் அதிகம் உண்டால் சோம்பேறித்தனம் உண்டகும்.மாமிசம் அதிகம் உண்டால் காம உணர்வை அடக்க முடியாது.காரம் அதிகமானால் கோபம் அதிகரிக்கும்.பச்சரிசி சாதம் மூளைக்கு பலம் கொடுக்கும்.கோதுமை உடலுக்கு பலம் கொடுக்கும்.இவற்றை சமமாக எடுத்துக்கொண்டால் பக்குவமாக வாழ முடியும்!!

நவகிரக தோசம் போக்கும் முறை

ஒரு மஞ்சள் பையில் ஒரு கிலோ நவதானியம் கட்டி வியாழக்கிழமை இரவு அதை தலைக்கு வைத்து படுக்க வேண்டும் வெள்ளிக்கிழமை காலை அதை எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் ,தண்ணீர் கலந்து கிரைண்டரில் அரைத்து கட்டியாக உருட்டி பசு மாட்டிற்கு உண்ணக்கொடுக்க வேண்டும்..பசு மாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உள்ளனர்.அவர்கள் நவதானிய சக்தியை ஈர்த்து திருப்தி அடைகின்றனர்.இதன் மூலம் நவகிரக தோசங்களில் இருந்தும் கண் திருஷ்டி செய்வினை தோசங்களில் இருந்தும் விடுபடலாம்

கடன் சுமை நீக்கும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை

  • திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை. 
 
  • மகரிஷி மோட்ச தலம் :மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு.
 
  • ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
 
  • இத்தலத்தில் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ விளங்கு கிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
 
  • பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.

Thursday, 16 August 2018

நாச்சியார் கோயில் - ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர்நம்பியான ஸ்ரீனிவாச பெருமாள்


  • கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில்உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர்நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும்கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
  • ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில்ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவதுநாச்சியார் கோவில் திருத்தலம். இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாசபெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர். 

கோவிலின் வரலாறு:
  • கோச்செங்கணான் என்ற சோழமன்னன் சிவனுக்கு எழுபது கோயில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக்கட்டியது திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது. சோழமன்னன் கோச்செங்கணான் கட்டிய திருக்கோயில் என்பதைத் தன்பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்
கோவில் கோபுரம்:
  • இத்திருக்கோயில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் ஸ்தலபுராணம் பெண்ணுக்கு முன்னுரிமை தந்த பெருமாளின் பெருமையைக் குறிக்கிறது
  • மஹாலஷ்மி தாயார் திருநறையூரில் வகுளாதே விநாச்சியாராக வளர்ந்து வந்ததால், மகரிஷிமேதவி விருப்பத்திற்கிணங்க நாச்சியார்கோயிலாக இவ்வூரின் பெயர்மாறியது என்பதுபுராணகதை.
    • மேதவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார்வழக்கம்போல் ஓர்நாள் நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர்கைகளில் சிக்கியது.
    • அந்தக்கணம் ஓர்அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டைசெய்து பூஜித்துவருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்துவந்தார்.

  • மகரிஷியிடம் வளர்ந்த மகாலட்சுமி இவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி விரும்பினார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார்.
     
 பெருமாளின் விருப்பம் :
  • அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.
     
மகாலட்சுமியின் திருமணம்:
  • அவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார் முனிவர். அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு. கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தேரியது. தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் எனப் பெயர் பெற்றது.
பெண் பெருமை போற்றும் நாச்சியார் கோவில்:
  •  பெருமாள் தலங்கள் அனைத்திலும் பெருமாளுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கபடுகிறது. ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதைக் காட்டும் வண்ணம் இப்பெயர் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இங்கு தாயார் முன்னே செல்ல பெருமாள் தாயார் பின்னே சென்று எழுந்தருளுவது, பெண்ணுக்கு முன்னுரிமை தருவதைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது. 
கல் கருடன் ஊர்வலம்:
  •  கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை. மார்கழி மற்றும் பங்குனிகளில் மிகவும் சிறப்பாக இருக்கும். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். நான்கு டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும்.
  • நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம். 
தோஷம் நீக்கும்:
  • கல்கருடன் நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா இஷ்ட சித்திகளையும் பெறுவர்.  
சுமங்கலி பாக்கியம் :
  •  சுமங்கலி பாக்கியம்ஆடி மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி திதியில் வணங்குபவர்களுக்கு குழந்தைபாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவனும் கிடைப்பார். 
  • திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கருடனின் திரு நட்சத்திரமான சுவாதி அன்று, இங்குள்ள கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. 
சிரவண தினத்தில் மோட்சம்:
  • இக்கோவில் நந்தவனத்தில் இரண்டு கருட பட்சிகள் வசித்து வந்தன. தினமும் கோவில் பூஜை நேரத்தில் இக்கருட பட்சிகள் பெருமாள், தாயார், கருடன் பூஜை முடியும் வரை கோவிலிலேயே பிரகாரத்தின் சுவர்கள் மீது அமர்ந்திருந்து பூஜை முடிந்தவுடன் சென்றுவிடும்.
  • 1999 ஜனவரி 18ஆம் தேதி காலை பூஜைக்கு இவ்விரு பட்சிகள் வரவில்லை. பதைத்துப்போன அர்ச்சகர்கள், பக்தர்கள் கருட பட்சிகளை தேடிச் சென்ற பொழுது கோவில் தல விருட்சமான மகிழ மரத்திற்கு கீழே இவ்விரு கருட பட்சிகளும் ஒன்றை அணைத்தவாறு பகவானுக்கு உகந்த தினமான சிரவண தினத்தன்று மோட்சம் அடைந்தன. இதனை சிறப்பிக்க தனி சன்னதி வைத்து வழிபட்டு வருகின்றனர்.

Wednesday, 15 August 2018

தெப்பெருமநல்லூர் :::: நாகபாம்பு அர்ச்சனை செய்த அதிசயம்

நாகபாம்பு அர்ச்சனை செய்த அதிசயம்: 

  • இந்தியாவில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் என்னும் பகுதியில், திருநாகேஸ்வரம் என்னும் ஊரிற்கு அருகில் உள்ள தெப்பெருமநல்லூர் என்னும் ஊரில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதசுவாமி எழுந்தருளி இருக்கும் ஆலயம் இருக்கின்றது. இவ் ஆலயத்தில் நாகபாம்பு ஒன்று வில்வம் இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
  • கடந்த 15.01.2010 ம் திகதி காலை 10:30 மணியளவில் கங்கண சூரிய கிரகணம் நிகழ்வதற்கு சிறிது நேரம் முன்பதாக; ஆலய சிவாச்சாரியார் அவர்கள் கருவறைக்கு சென்ற பொழுது, அங்கே மூலவிக்கிரகத்தின் உச்சியில் ஒர் நாகபாம்பு அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அந்த நாகம் சிவலிங்கத்தில் இருந்து மெதுவாக இறங்கி நேராக அங்கிருந்த வில்வமரத்தின் மேல் ஏறி அந்த வில்வமரத்தில் இருந்து சில வில்வம் இலைகளைப் பறித்து எடுத்து; அவற்றை தனது வாயில் வைத்துக் கொண்டு திரும்பவும் கருவறைக்குள் நுளைந்து சென்று, சிவலிங்கத்தின் உச்சியில் மேல் அமர்ந்து அதனை சிவலிங்கதிற்கு அர்சனை செய்தது. வில்வமரம் இவ் ஆலயத்தின் தலவிருட்சமாகும்.
  • இவ்வாறு பலமுறை வில்வம் இலைகள் பறிக்கப்பெற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பெற்றது என அறிய முடிகின்றது. இந்நிகழ்வை பல பக்தர்கள் அதிசமாகவும், பக்தியோடும் பார்த்து வணங்கியுள்ளனர். இந் நிகழ்வினைக் கேள்வியுற்ற ஊர் மக்கள் அதனைக் காண திரண்டு வந்துள்ளனர். இந்நிகழ்வின் போது பக்தர்கள் சிலர் நாகபாம்பை பிந்தொடர்ந்த போது நாகம் சீறி அவர்களை விரட்டியுள்ளது. இந் அதிசய நிகழ்வுபற்றிய செய்திகள் பல தமிழ்நாட்டுப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி


  • திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகாரதிருத்தலமாகும். பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் போக்கிய புண்ணிய தலம்.
  • பிராமணரை கொலை செய்தல், முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம்விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினைசெய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல், திருமணத்திற்கு முன் உறவுகொண்டு பின் வேறு ஒருவரை திருமணம் செய்தல், திருமணத்திற்கு பின் வேறொருபெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல் ஒருவன் செய்யாததவறை செய்தான் என சொல்லும் பொய் ஆகியவை பிரம்மஹத்தி தோஷமாகும்.
  • ஒருவருக்கு திருமணத்தடை ஏற்படுதல், புத்தி சுவாதினம் ஏற்படுதல், நோய்களால்அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லுதல், கணவன்-மனைவிபிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம்முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.
  • திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிதிருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிசோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான்வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவிடைமருதூரில் இருக்கும்சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப்படுத்தப்படுகிறார்.
  • இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின்பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.காசிக்கு நிகரான தலம்காசிக்கு நிகரான தலம்.
  • காசிக்கு நிகரானஇத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
  • பிரம்மஹத்தி தோஷம்பிரம்மஹத்தி தோஷம்வரகுண பாண்டியன் என்ற மன்னன் காட்டில் வேட்டையாட சென்று திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது அவன் வந்த குதிரை, வழியில் ஓர் அந்தணனை மிதித்துக்கொன்று விட்டது. அதனால் பாண்டிய மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
  • அதன் காரணமாக அவன் அநேக நேரங்களில் மனநிலை மாறி, தன் நிலை இழந்துதிரிந்தான். பாண்டிய மன்னன், மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கிமுறையிட்டான். அப்போது ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ளஈசனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கூறியது.
  • இதையடுத்து வரகுண பாண்டியமன்னன் திருவிடைமருதூர் திருத்தலம் வந்தான்.காத்திருந்த பிரம்மஹத்திகாத்திருந்த பிரம்மஹத்திமகாலிங்க சுவாமியை வணங்குவதற்காக பாண்டியன் ஆலயத்துக்குள் பிரவேசித்தபோது, அவனைப் பற்றிக் கொண்டிருந்த , சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சிக்கொண்டு மன்னனை விட்டு வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடித்துமன்னன் திரும்பி வரும்போது, மீண்டும் அவனைப் பிடித்துக் கொள்ள எண்ணியபிரம்மஹத்தி அங்கேயே காத்திருந்தது.
  • தோஷம் நீங்க வழிபாடுதோஷம் நீங்க வழிபாடுவரகுண பாண்டியன் மகாலிங்கத்தின் முன் நின்று வழிபட்டபோது, இறைவனின் பூரணகுணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி, வந்த வழியேமீளாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான். கோவில் ஆலயத்தின் வாசலில், தலையை சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலைஒன்று காணப்படுகிறது. அதைத்தான் பிரம்மஹத்தி என வர்ணிக்கிறார்கள்.
  • மனநோய் தீர்க்கும் தலம்மனநோய் தீர்க்கும் தலம்இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன்நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். இங்குள்ளகாருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் குளிக்க வைத்து காலை, மாலை இருவேளையும்மகாலிங்கசுவாமியை வழிபடச் செய்வார்கள்.
  • தற்போது இந்த ஆலயத்தில் தோஷபரிகாரம் செய்யப்படுகிறது. மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரேமருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகும்.பரிகார தலம்பரிகார தலம்திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம்உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலேபாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன.
  • மகாலிங்க சுவாமிஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியாக வெளிவராமல், அம்பாள்பெருநலமாமுலையம்மை சன்னிதியில் வழிபட்டு, அம்பாள் மூகாம்பிகையையும் வழிபாடுசெய்து அதன் அருகில் உள்ள வாசல் வழியாகத்தான் வெளிவர வேண்டும்.
  • எங்கு எப்படி செல்வதுஎங்கு எப்படி செல்வதுஇத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப்புலவர் முதலானோர் பாடியுள்ளனர்.
  • பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்இதுவாகும். இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேதயாகம் செய்த பலனைப் பெறுவர்.கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாயமலையை வலம் செய்த பலனை அடைவர்.

நீலகண்டேஸ்வரர் கோவில், திருநீலக்குடி

தல வரலாறு:

  • மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர்.
  •  மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார்.
  • இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி
  • பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வநிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
தலத்தின் சிறப்பு:

  • இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.
  • எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுகிறது.
  • இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.
  • அபிஷேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு பதில் சொர சொரப்பாகவே இருக்கிறது.
  • ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய் உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும்.
கோவில் அமைப்பு:

  • இத்தலத்தில் இராஜ கோபுரம் இல்லை. இரண்டு நுழைவாயிலகள் உள்ளன. முதல் நுழைவாயில், 2-ம் நுழைவாயில் இரண்டிறகும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. கருவறையில் இறைவன் ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
  • இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி என்கிற ஸ்ரீ தவக்கோல அம்மை. 2-வது அம்மனின் பெயர் திருமணக்கோலத்தில் உள்ள ஸ்ரீஅனூபமஸ்தநி என்கிற ஸ்ரீஅழகாம்பிகை.
  • ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருந்தாலும், கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது.
  • அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். ஆனால் சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகும் என்று சொல்லப்படுகிறது. பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டென்று கூறுகிறார்கள்.
  • இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்ள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட தலமாக இக்கோவில் விளங்குகிறது.
  • மேலும் பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் என்ற பெருமையும், வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. ஸ்ரீ மனோக்கியநாத சுவாமியை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து இறைவனை வழிபடலாம்.
  • பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
  • இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழா சிறப்புடையது. மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டதால்,அதற்கு நன்றிக் கடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இளந்துளை,ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவகுடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார்.
  • இவ்விழாவில் பன்னிரண்டாம் நாளில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் சென்று வருவது அற்புதமான காட்சியாகும். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் முகமாகவே இத்தலத்து சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது.(ஏழூர்களாவன - இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடீ, திருநீலக்குடி). இத்தலத்தில் பெருமான் மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்திப்பதால் திருவிழாக்காலத்தில் சுவாமிக்கு முன்னால் எதிர்முகமாக மார்க்கண்டேயர் உற்சவமூர்த்தியாக செல்கிறார்.
  • திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பல்லவ மன்னன் அமணர்களின் ஆலோசனைப்படி அப்பர் பெருமானை கல்லோடு கட்டிக் கடலில் வீழ்த்திய போது, அவர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது.
  • இத்தலத்து பதிகத்தின் 7-வது பாடலில் அப்பர் இதனைக் குறிப்பிடுகிறார். "அமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி மன்னர் உத்திரவின்படி கடலில் வீச, என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி இறைவனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன்" என்று அப்பர் பாடியுள்ளார்.
  • மேலும் தனது பதிகத்தில் "தேடிவைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீர் இறக்கும் போது உம்முடன் வரார், ஆகையால் நாள் தோறும் நினைத்து தொழுது சிவகதி சேர்வீர் என்றும், உயிர் உடலை விட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே, நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி இறைவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக" என்றும் அறிவுறுத்துகிறார்.

தலைவிதியை மாற்றும் திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வரர்!

  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள  திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்ற பெயரில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.  இந்த திருத்தலத்தில் இவரை வணங்கினால் தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்தவராகவும், மனவியாதிகள் மற்றும் தீராத துன்பங்கள் தர முயலும் கொடிய தரித்திரங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • இக்கோயிலின் முன்பகுதியானது 120 அடி உயரமுள்ள ஓரு ரதத்தினை ஓத்துள்ளது. ரதத்தின் சுவர்கள் மற்றும் கோயில்கள் சுவர்களில் இராமாயணத்தில் வரும் காட்சிகள் ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.  
ஸ்ரீ சரபேஸ்வரரின் தோற்றம்:
  • இரணியன் என்ற அசுரன் பரம்பொருளை நோக்கி சாகாவரம் வேண்டி தவம் செய்து ஈசனிடம்  இருந்து தேவர், மனிதர், விலங்குகள்  முதலியவற்றாலும் பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற அரிய வரத்தினை கேட்டான்.
  • எதிர்காலத்தில் நடப்பன எல்லாவற்றையும் அறிந்த பரம்பொருள், இரணியனுக்கு அவன் வேண்டிய வரத்தினை அளித்தார். இதனால், தன்னை  எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்ற கர்வத்தில் தானே கடவுள். இதனால் தன்னை மட்டுமே அனைவரும் கடவுளாக வணங்கவேண்டும் எனக்கூறி கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான்.
  • இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான் பிரகலாதன். அதாவது அவனது மனைவி கர்ப்பம் தரித்த நாள் முதல் நாரத மாமுனி, தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு போதித்த ஹரி ஸ்ரீமன் நாராயணன் நாமத்தைக் கேட்டு பிறந்தான். எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனைக் கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான்.
  • பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி எங்கே உன் கடவுள்? எனக் கேட்க, பிரகலாதனோ என் கடவுள், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் எனக் கூறினான். கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க அதிலிருந்து நரசிம்ம உருக்கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன்.
  • இரணியனது வரத்தின்படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலோ இல்லாத அந்தி நேரத்தில் எவ்வித ஆயுதங்களும் இன்றி தன் நகத்தினால், வீட்டுக்கு உள்ளேயும் இல்லாது, வெளியேயும் இல்லாது  வாசற்படியில் வைத்து அவனை வதம் செய்தார்.
  • இரணியனின் குருதியைக் குடித்தால் மதி மயங்கி ஆக்ரோஷமானார் நரசிம்மர். இதனால் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் அனைவருக்கும் பயம் வந்தது. மனைவியாக இருந்தாலும் லட்சுமிக்கும் நரசிம்மர்மேல் பயம் வந்தது. எங்கே தன்னையும் கொன்று விடுவாரோ என பயந்து தேவர்களுடன் எல்லாம் வல்ல ஈசனின் திருவடிகளில் சமர்ப்பணமானார்கள்.
  • கருணைக் கடலான ஈசனுக்கு கோபம் வந்தது. இதனால் எட்டுக் கால்களும், நான்கு கைகளும், இரண்டு இறக்கைகளும், கூர்மையான நகங்கள், பற்கள்,யாளி முகம் கொண்ட சரபேஸ்வரராக மாறினார். பாதி உருவம் அகோர பறவையாகவும், மீதி உருவம் அகோர மிருகமாகவும் இருந்தது. மாமிச வெறியுடன் கூடிய ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்த நரசிம்மர் முன் தோன்றினார்.
  • மிக பயங்கரமான எல்லா மிருகங்களும் இணைந்த உருவம் திடீரென தன் முன் தோன்றியவுடன் நரசிம்மர், தன்னை அழிக்க ஓரு சக்தி வந்திருப்பதாக எண்ணினார். சரபேஸ்வரரோ ஒங்கி ஹாஎன சத்தம் எழுப்பியவுடன் அண்டங்கள் அதிர்ந்தன. மேலோகங்கள் ஆடின, நரசிம்மருக்கு கோபம் போய் பயம் வந்தது.
  • அந்தப் பயத்தினால் சரபேஸ்வரரின் நாராயணனாகி, லட்சுமியுடன் சேர்ந்து ஈசனை வணங்கினார். இவ்வாறு பரம்பொருள் ஈசன் பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். 
விதியை மாற்றும் ஸ்ரீ சரபேஸ்வரர்:
  • ஸ்ரீசரபேஸ்வரரை வழிபட உகந்த நேரம் ராகு காலமாகும். ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் நோய்கள் நீங்கும். செயல்களில் வெற்றி பெறுவார்கள். எத்தகைய விதியையும் மாற்றும் வல்லமை சரபேசுவரருக்கு உண்டு.
  • இந்த கலியுகத்தில் மனிதன் தன்னுடைய அபரிதமான அறிவியல் வளர்ச்சியால் ஏற்படுத்திக் கொடுக்கும் எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும் தப்புவதற்கு சரணடைய வேண்டிய ஓரே தெய்வம் ஸ்ரீசரபேஸ்வரர். இவரை வேதங்கள் அழிக்கும் கடவுளான அக்கினி தத்துவத்துக்கு உரியவராகக் குறிப்பிட்டாலும் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளையும் அழித்து நம்முடைய தன்பங்களை தீர்த்து, தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு நல்வாழ்வை அமைத்துக் கொடுக்கும் தெய்வம் சரபேஸ்வரர்.
  • இயற்கையின் சீற்றங்களான நிலநடுக்கம், இடி, புயல், மழை, சூறாவளி, ஆழிப் பேரழிவு, தீவிபத்து, விஷக்கடிகள், மருத்துவத்தால் கைவிடப்பட்ட மாறாத உடல் உபாதைகள் மற்றும் மனவியாதிகள் என்று தீராத துன்பம் தர முயலும் கொடிய தரித்திரங்களும் சரபரை வழிபடும் பக்தனைத் தாக்காமல் விட்டு ஒடிவிடும்.
  • இப்படி விதியையே புரட்டிப்போட்டு நல்லதை செய்யும் சக்தி சரபேஸ்வரருக்கு மட்டுமே உண்டு. எதிரிகள் குலநாசம், பில்லி,சூனிய ஓழிப்பு, மரண பயம் அகலுதல், நீடித்த ஆயுள், எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது. 
  • மேலும் இவரை நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும்  குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும், பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]