சூரியனுக்கு முன்பின் 15 டிகிரிக்குள்
சனி அமையப் பெற்றால் அஸ்தங்கம் பெறுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனி 8 ல்
அமைந்தால் வீடு, வாகனம், கால்நடை யோகம், அரசருக்கு சமமான வாழ்வு அமையப்
பெறும். 10ல் அமைந்தால் ஒருவரை மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு
செல்கிறார்.
கோட்சார ரீதியாக வரக்கூடிய ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவற்றில் அசுப பலனையே அடைய நேரிடுகிறது.
சந்தை கூட்டத்தில் செருப்பை வீசினாலும் சனியன் பிடித்தவன் தலையில் சரியாக
விழும் என்பது பழமொழி. ஒரு மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வந்தால் நாட்டில்
பஞ்சம் வரப்போவதற்று அறிகுறியாகும். சனி பிணம் துணை தேடும் என்பார்கள்.
ஒருவர் சனிக்கிழமையில் இறந்துவிட்டால்
அடுத்த சனிக்கிழமையில் மேலும் ஒரு இழப்பு நிகழும். சைவர்கள் சனிக்கிழமைகள்
இறந்தவர்களை கொண்டு செல்லும் போது ஒர தேங்காயையும், அசைவர்கள் ஒரு
கோழியையும் கட்டிக் கொண்டு செல்வது பரிகாரமாகும்.
சனி தான் ஒரு ராசியில் நின்ற பலனைவிட பார்வை செய்யும் இடங்களுக்கு கொடிய
பலன்களை உண்டாக்கும். புத்திர ஸ்தானத்தை பார்வை செய்தால் புத்திர பாக்கியம்
தாமதப்படும். களத்திர ஸ்தானத்தை பார்வை செய்தால் திருமணம் நடைபெற தாமதம்
உண்டாகும்.
ஏழரை சனி:
ஒருவருடைய ஜெனன ராசிக்கு 12 ல் சனி வரும் போது ஏழரை சனி தொடங்குகிறது.
ஒவ்வொரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வீதம் சந்திரனுக்கு 12,1,2,ல் சஞ்சாரம்
செய்யும் காலமே ஏழரை சனி என்று கூறப்படுகிறது. மாளிகையில் வசிக்கும்
மன்னரைகூட மண்குடிசைக்கு தள்ளக்கூடிய வலிமை சனிக்கு உண்டு. சனி இறைவனையும்
விட்டு வைப்பதில்லை என புராணங்கள் கூறுகின்றன. ஜென்ம ராசிக்கு 12 ல் சனி
சஞ்சரிக்கும் போது விரைய சனியும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் போது ஜென்ம
சனியும், 2 ல் சஞ்சரிக்கும் போது பாத சனியும் நடைபெறுகிறது. இதில் சிறு
வயதில் ஏழரை சனி நடைபெற்றால் மங்கு சனி என்றும், மத்திம வயதில் இரண்டாவது
சுற்றாக ஏழரை சனி நடைபெற்றால் பொங்கு சனி என்றும் கூறுவது உண்டு, 3 வது
சுற்று மரண சனி ஆகும்.
பொங்கு சனி நடைபெறும் காலங்களில்
பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சனி சந்திரனுக்கு கோட்சார ரீதியாக
8ம் வீட்டில் சஞ்சரிப்பதனை அஷ்டம சனி என்றும், 4ம் வீட்டில் சஞ்சரிப்பதனை
அர்த்தாஷ்டம சனி என்றும், 7 ல் சஞ்சரிப்பதனை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.
ஆக, சனி கோட்சார ரீதியாக சந்திரனுக்கு 1,2,4,7,8,10,12 ல்
சஞ்சரிக்கின்றபோது சாதகமற்ற பலன்களை வழங்குகிறார்.
பொதுவாக சனி ஜெனன காலத்தில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும்
சனியின் ராசியான மகரம், கும்பத்தில் பிறந்தவர்களுக்கும், சனி யோகாதிபதியாக
விளங்கும், ரிஷபம், துலாமில் பிறந்தவர்களுக்கும், சனியின் நட்சத்திரங்களான
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கும் ஏழரைச் சனி,
அஷ்டமச் சனி போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
சனி பகவான் ஜெனன காலத்தில் நீசம் பெற்றோ, பலஹீனமாக
அமையப் பெற்றோ இருந்தாலும், பிறக்கும் போதே ஏழரைச் சனி, அஷ்டமச் சனியில்
பிறந்தவர்களுக்கும் கோட்சார ரீதியாக ஏழரைச் சனி, அஷ்டம சனி வரும்
காலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படும். ஒரு ராசியில் சுமார் இரண்டரை
வருடகாலம் தங்கும் சனி பகவான் ஜென்ம ராசிக்கு கோட்சாரத்தில் 3,6,11 ல்
சஞ்சரிக்கின்ற போது அனுகூலமான பலன்களை வாரி வழங்குவார்.
சனியின் வக்ரகாலம், சனிபகவான்
சூரியனுக்கு 251 டிகிரியில் இருக்கும்போது (9 வது ராசியில்) வக்ரம் பெற்று
சூரியனுக்கு 109 வது டிகிரியில் வருகின்றபோது (5 வது ராசியில்) வக்ர
நிவர்த்தி அடைவார். சுமார் 140 நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை வக்ரம்
பெறுவார்.
சனி ஓரையில் செய்யக்கூடியவை :
இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் தொடங்க, நிலத்தில் உழவு செய்ய, மோட்டார் செட்
வாங்க சனி ஓரை நல்லது. சனி ஓரையில் நல்ல காரியங்கள், சுபகாரியங்கள் ஆகியவை
மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
இத்தலம் காரைக்கால் நகரிலிருந்து 6 கி.மீ. கும்பகோணத்திலிருந்து 50 கி.மீ
தொலைவில் உள்ளது. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால் நல் ஆறு என்று பெயர்
பெற்று, அதுவே மருவி நள்ளாறு என அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு ஆதிபுரி,
தர்ப்பாரணயம், நகவிகடங்கபுரம், நளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு.
திருநள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நளதீர்த்தம், பிரம்ம
தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், அம்ச தீர்த்தம் ஆகியன
இங்கு உள்ளன. அதில் நள தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோய்களும்,
பிரச்சினைகளும் விலகும்.
திருகொள்ளிகாடு:
மனிதனின் துன்பங்களுக்கு தன்னையே காரணமாக்குகின்றாரே என வருந்திய சனி
பகவான் திருக்கொள்ளிகாடு எனும் திருத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில்
நீராடி அங்குள்ள அக்னீஸ்வரர் என்னும் சிவனை வணங்கினார். நடுநிலைமையுடன்
மக்களின் நன்மை, தீமை செயல்களை ஆராய்ந்து பலனிப்பவன் என சிவனால்
புகழப்பட்டு அதே தளத்தில் பொங்கு சூரியன் வீற்றிருக்கிறார்.
சனிபகவானை வழிபாடு செய்யும் முறைகள்:
சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டால் சனியால் துன்பம் ஏதும் ஏற்படாது.
அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும், சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.
சனிக்கிழமைகளில் விரதமிருந்து கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவும்.
சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்யவும்.
ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால்
முடிந்த உதவிகளை செய்யவும். ஹனுமனை வழிபடவும். அனுமன் துதிகளை கூறவும்.
விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.
நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள்,
சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள்
ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது.
திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல
கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி
கொண்ட சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரன்
கோயில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு.
திரு+ நள + ஆறு என்பது திருநள்ளாறு என்று ஆனது. இதில் 'நள' எனும் சொல்
நளச் சக்ரவர்த்தியை குறிக்கிறது. அவர் இக்கோவிலில் வந்து வழிபட்டு, சனி
தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக நளச் சக்ரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால்
திருநள்ளாறு என பெயர் பெற்றது. பாண்டிச்சேரியில், காரைக்கால் அருகே
அமைந்துள்ள திருநள்ளாறு, நவகிரஹ ஸ்தலங்களில் ஒன்று.
சனீஸ்வர பகவானின் சக்தி வாய்ந்த திருவுருவச் சிலையைக் கொண்ட
இக்கோயில்,ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் கோயிலின் ஒரு அங்கமாகும். ஸ்ரீ
தர்பாண்யேசுவரர் கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார்.
காரைக்காலில் இருந்து சாலை வழியாக எளிதில் திருநள்ளாறை அடைய முடியும். திருச்சி, திருவாரூர் வழியாகவும் காரைக்கால் வந்து, பிறகு திருநள்ளாறை அடையலாம்.
மூன்று வருடத்திற்கு ஒரு முறை தன் இருப்பிடத்தை (ராசி) மாற்றி கொள்பவர்
சனி பகவான். சனி பகவான் வீற்றிருக்கும் இடத்தைப் பொறுத்து தான் பல்வேறு
ராசிக்காரர்களின் இன்ப துன்ப நிலைகள் கணிக்கப்படுகிறது.
பச்சைப் படிகம் எனும் கீர்த்தனை திருநள்ளாறில் இயற்றப்பட்டதால், தமிழ்
இலக்கிய வரலாற்றிலும் இவ்வூருக்கு முக்கிய பங்கு உண்டு. மிகவும் சுத்தமாக
பராமரிக்கப்படும் அமைதியான, அழகான ஊர் திருநள்ளாறு. அங்கு சென்று வழிபடும்
அனைவருக்கும், நல்ல பலன்களை அள்ளித் தருவார் சனி பகவான்.
திருநள்ளாற்றின் வரலாறு
திருநள்ளாற்றிற்கு மிக சுவாரஸ்யமான வரலாறு உண்டு. பச்சைப் படிகம் என்ற
கீர்த்தனைகள் மூலம் திருநள்ளாறு குறித்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள
முடிகிறது. சைவ சமய பாரம்பரியம் கொண்ட இவ்வூர் மக்கள், ஜெயினர்களின்
வருகையால் அவர்களின் சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டனர்.
அந்த நகரத்தை ஆண்ட ராஜாவோ இத்தகைய மாற்றத்தை விரும்பவில்லை. மாறாக, அந்த
நகரத்தின் பாரம்பரிய சமயமான, சைவ சமயத்தை நிறுவ விருப்பம் கொண்டிருந்தார்.
அப்போது, சைவத் துறவியான திருஞான சம்பந்தரின் சிறப்புக்களைப் பற்றி
கேள்விப்பட்ட அரசர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் அரசரின்
அழைப்பை ஏற்று இங்கு வந்த திருஞான சம்பந்தர், அரசருக்கு நீண்ட காலமாக
இருந்த உடல் கஷ்டங்களை தன் விசேஷ சக்திகளை கொண்டு குணமாக்கினார்.
இது அந்நகரம் முழுக்க பரவ ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் திருஞான
சம்பந்தர், மக்களின் துன்பங்களையும் நீக்கி மக்கள் மனதில் நீங்கா இடம்
பிடித்தார். திருஞான சம்பந்தரின் புகழ் நகரம் முழுவதும் பரவியது.
திருஞான சம்பந்தரின்பால் ஈர்க்கப்பட்டு, மக்கள் சைவ சமயத்தைத் தழுவ
ஆரம்பித்தனர். இதனைக் கண்ட ஜெயின் சமயத்தினர், சம்பந்தரை போட்டிக்கு
அழைத்தனர். அதில் வெற்றி பெற்ற சம்பந்தர், அங்கு மறுபடியும் சைவ
சாம்ராஜ்யத்தை நிறுவ பெரும் பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக, எழுந்தது
தான் திருநள்ளாறு கோவில்.
சனி என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும்
கிலிதான். ஆனால் சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும்
தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி
கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன்,
ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார்.
பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும்
சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம்
தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30
வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம்.
நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.
சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை
கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய
நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி
ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.
சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு,
வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன்,
சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு
ஆகும்.
ஆயுள் காரகனாக செயல்படும் சனி
கலகங்கள், அவமதிப்பு, நோய், போலியான வாழ்வு, அடிமை நிலை, கடுகு, உளுந்து
எள்ளு, கருப்பு தானியங்கள், இயந்திரங்கள், ஒழுங்கற்ற செயல்கள், விஞ்ஞான
கல்வி, இரும்பு உலோகங்கள், அன்னிய நாட்டு மொழிகள், ஏவலாட்கள், எடுபிடி,
திருட்டு, சோம்பல் முதலியவற்றிற்கும் காரகம் வகிக்கிறார். இது மட்டுமின்றி
பாரிச வாய்வு, வாதநோய், எலும்பு வியாதிகள், பல் நோய், ஜலதோஷம், யானைகால்
நோய், புற்றுநோய், ஆஸ்துமா, ஹிஸ்ப்ரியா சித்த சுவாதீனம், கை கால் ஊனம்,
சோர்வு மந்தமான நிலை இயற்கை சீற்றத்தால் உடல் பாதிப்பு ஏற்படும்.
சனி தான் நின்ற வீட்டிலிருந்து 3,7,10 ம் வீடுகளை பார்வை செய்கிறார்.
இதில் 10ம் பார்வை மிகவும் பலம் வாய்ந்தது. 7 ம் பார்வை பாதி பங்கு பலம்
வாய்ந்தது. 3 ம் பார்வை மிகவும் குறைந்த பலத்தை உடையது. செவ்வாயின்
பார்வையை விட சனி பார்வை கொடியது. சனி சூரியனை பார்வை செய்தால் மிகவும்
கஷ்டப்பட்டே உணவு உண்ண வேண்டும். பல சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.
சனி சுக்கிரனை பார்வை செய்தால் இல்வாழ்வில் நிம்மதி இருக்காது. சனி
சந்திரனை பார்வை செய்தால் உடல் நிலையில் பாதிப்பு, தாய்க்கு தோஷம்
உண்டாகும்.
மகரம்,கும்பம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம லக்னத்திலிருந்தால்
எல்லா பாக்கியமும் கிடைக்கப் பெறும். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். ஒருவருக்கு
சனி திசை 4 வது திசையாக வந்தால் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களை
ஏற்படுத்தும். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு சனி நான்காவது திசையாக வரும். சனி ஜெனன ஜாதகத்தில்
3,6,10,11 ல் இருந்தால் கேந்திர திரிகோணங்களில் பலமாக இருந்தாலும், ஆட்சி
உச்சம் பெற்று இருந்தாலும் ஏற்றமான வாழ்வு உண்டாகும்.